search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை
    X

    ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை

    • மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை
    • டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் திருக்களம்பூரை சேர்ந்த ஷகிலாபானு, கருப்புக்குடிப்பட்டி சுகந்தி, வார்பட்டு பகுதியை சேர்ந்த அழகி, கருப்பர்கோயில்ப ட்டியை சேர்ந்த புவனே ஸ்வரி ஆகியோர் பிரசவத்தி ற்காக ஒரே நேரத்தில் அனு மதிக் கப்பட்டிருந்தனர்.

    இவர்களுக்கு டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.

    அப்போது 3 பேருக்கு ஆண்குழந்தையும் ஒரு வருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    ஒரே நேரத்தில் 4 பிரசவ ங்களை பார்த்து சாதனை படைத்த மருத்துவக் குழுவி ற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவி த்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் சாத னையை அறிந்த மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் மருத்து வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    அதேபோன்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்களை பார்த்த மருத்துவர்களை பாராட்டியும்.குழந்தைகளை ஈண்றெடுத்த தாய்மார்க ளுக்கு டாக்டர் அருள்மணி நாகராஜன் குழந்தைகள் நல பரிசு பெட்டகங்களை வழ ங்கி வாழ்த்துகளை தெரிவி த்தார்.

    இந்நிகழ்ச்சியில் டாக்டர் பூபதிராஜன், பிறப்பு பதி வாளர் உத்தமன், மருந்தா ளுநர் அன்பரசி, செவிலி யர்கள் சீதா, அம்பிகா, சூர்யா, ஆய்வக சீமா, சுகா தார ஆய்வாளர் பிரேம்கு மார், மருத்துவமனை உதவியாளர் செல்வி உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

    Next Story
    ×