search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழு தாக்குதல்
    X

    நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழு தாக்குதல்

    • புதுக்கோட்டை மாவட்டம் நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழு தாக்குதல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,

    தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக தழைச்சத்து யூரியா உரம் இடப்பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

    இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளை புல், புண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.

    விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்புச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

    இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஒரு கூடைத் தவிட்டில் 100 மி.லி. மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். பின்னர், ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரிகயிறு மூலம் வயலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச்செல்ல வேண்டும்.

    இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட இலைப்பகுதி விரிந்துவிடும்.

    இதனால் இப்புழுக்கள் கீழே விழுந்து மண்ணெண்ணெய் கலந்த நீரில் விழுந்து இறந்துவிடும். மேலும், மூன்றடி உயரம் கொண்ட குச்சிகளைப் பறவை இருக்கையாக அமைத்துப் பறவைகளைக் கவர்ந்து அவை தாய்ப் பூச்சிகளைக் பிடித்துண்ண வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    விவசாயிகள் தங்கள் பயிர்சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால்

    உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடவும் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி டுமாறு வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×