search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    X

    டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    • கந்தர்வகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    • மருத்துவ முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்.பகுதியில் காய்ச்சல் அறிகுறியுடன் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் அறிவுறுத்தலின்பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியாளர்கள் கொண்ட குழு கந்தர்வகோட்டைஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி முன்னிலையில், டெங்குத்தடுப்பு நடவடிக்கைகள், டயர்களை அகற்றுதல், ஒட்டுமொத்த தூய்மைப்பணி, ஏடீஸ் கொசு அழிக்க புகைமருந்து அடிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு பொதுசுகாதார விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மருத்துவ முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×