என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று
- ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
- சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலைக்கு பின் தொற்று படிப்படியாக குறைந்தது. 3-வது அலை உருவாகாமல் தடுக்கப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்திருந்த நிலையில் ஓரிருவர் மட்டும் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவுக்கு தற்போது 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சையில் நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் கவனமாக இருக்க அவ்வப்போது அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






