என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற வாலிபர் மாயம்
- ஆடு மேய்க்க சென்ற வாலிபர் மாயமானார்
- தாயார் அதிர்ச்சியடைந்தார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இடையன் வயல் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பார்த்தசாரதி (வயது 18). இவர் நேற்று மதியம் காளிகோவில் அருகே உள்ள வயல் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை 6 மணியளவில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்த நிலையில் பார்த்தசாரதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






