search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.12 லட்சம் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது
    X

    ரூ.12 லட்சம் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது

    • ரூ.12 லட்சம் பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவான அசோக்கை தேடி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரம் 34-ம் வீதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியராஜ். இவர், சிங்கப்பூரில் உள்ள ஷாஜகானிடம் பணிபுரிந்து வருகிறார். இவர், சிங்கப்பூரிலிருந்து ஷாஜகான் அனுப்பும் பணத்தை தமிழகத்தில் உள்ள நபர்களிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருருதார்.

    இந்நிலையில், கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டைக்கு பணத்தை விநியோகம் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, திருமயம் அருகே கொசப்பட்டி பகுதியில் ஞானபாக்கியரா ஜை பின்தொடர்ந்து சென்ற 2 பேர், தங்களை ஊழல் தடுப்பு போலீஸார் என்று கூறி, அவரிடம் இருந்த ரூ.12 லட்சத்தை பறித்துச் செனறுள்ளனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருமயம் போலீஸார் விசாரித்ததில், ஆ லங்குடி அருகே உள்ள கீழ கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்த சரவணன்(வயது,38), எலி (எ) பாலமுருகன்34), கல்லாலங்குடியைச் சேர்ந்த அசோக் ஆகியோர் கூட்டுச்சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, சரவணன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அசோக்கை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×