என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் தொழிலாளி பலி
- வாகன விபத்தில் தொழிலாளி பலியானார்.
- மனைவி மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒலுகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை(40). இவர்கள் 2 பேரும் பொன்னமராவதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
பொன்னமராவதி அருகே பரியாமருதபட்டி சாலையில் சென்றபோது சக்திவேல் என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட த ம்பதியினர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்ன அந்த கார் அருகே உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முற்றிலுமாக முறிந்து கீழே விழுந்தது.
இதையடுத்து அவ்வழியாக வந்தவர்க்ள படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த வித்து குறித்து பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






