என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 பெண்கள் மாயம்
- வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை
- புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் தேடி வருகின்றனர்
ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் மேற்கு பகுதியைச் சேர்ந்த பவ ளத்தாள்புரம் குருநாதன் என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் உறவினர்களிடம் சுற்றி தேடி பார்த்து வி சாரணை செய்தும் காணவில்லை. இது குறித்து குருநாதன் வடகாடு போலீசில் குருநாதன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து மாயமான கலைச்செல்வியை தேடி வருகிறார்.
இதேபோல ஆலங்குடி அருகே உள்ள கல்லிக்கொல்லையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி செந்தமிழ் ( வயது 22 ), இவர்களின் குழந்தை கவின் (வயது 2). செந்தமிழ் தனது 2 வயது குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.இது குறித்து புள்ளான்விடுதி சீரியார் தெருவை சேர்ந்த செந்தமிழினின் தந்தை செல்லத்துரை வடகாடு போலீசில் மகள் குழந்தை ஆகிய இருவரையும் காணவில்லை என் று கொடுத்தார். புகாரின் பேரில் வடகாடு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்குபதிவு செய்து தாய் குழந்தையை தேடி வருகின்றனர்.






