என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனம் மோதி பெண் பலி
- இரு சக்கர வாகனம் மோதி பெண் இறந்தார்.
- சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை விராலிமலை தாலுகா பகவான் பெட்டியை சேர்ந்தவர் குழந்தை மனைவி அழகம்மாள் (வயது 55). இவர், பகவான்பட்டி அருகே புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வா கனம் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story