என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னல் தாக்கி இளம் பெண் பலி
    X

    மின்னல் தாக்கி இளம் பெண் பலி

    • மின்னல் தாக்கி இளம் பெண் பலியானார்
    • வயலுக்கு சென்ற போது பரிதாபம்


    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி பிரதகம்பாள்புறத்தைச்சேர்ந்த சாமிக்கண்ணு மகள் பிரியங்கா ( வயது 26) பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் பிரியங்கா அலறியுள்ளார். இவரின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், பிரியங்காவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×