என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
- அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது
- பெண்கள் ஊர்வலமாக வந்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டையில் காவல் தெய்வமாக விளங்கும் அகிலாண்டேஸ்வரர் அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு மது எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பெண்களால் ஜோடிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாலையை வெட்டி வைத்து, பூச்சூடி ஊர்வலமாக சுமந்து வந்து கோவில் முன்னர் குவித்து அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் மது எடுப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Next Story