search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை
    X

    தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை

    • தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை
    • புதுக்கோட்டை அருகே பரிதாபம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருமயம் அருகே தேக்காட்டூர் லெனா விலக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47). இவரது தந்தை சத்தியசீலன் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்த செய்தி கேட்டு கமல்ராஜ் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் கமல்ராஜ் குடும்பமும் இலங்கையில் உள்ள நிலையில் இவர் தனியாக முகாமில் இருந்து வந்ததால் ஆறுதல் கிடைக்காமல் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கமல்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கமல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×