search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை
    X

    முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை

    • முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது
    • பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள முத்து மாரியம்மனுக்குத் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கருவரை முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் மற்றும் சின்ன சின்ன மாரிய ம்மனுக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், பன்னீர்,தேன், கரும்புச் சாறு போன்ற பொருட்களால் அபி ஷேகம் நடைபெற்றது.அம்மன்கருக்கு பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராத னை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில். 201 பெண்கள் கலந்துகொண்டனர். விழாக் கமிட்டியாரால் தேங்காய், பழம், பத்தி, பூ, நெய், திரி தீப்பெட்டி போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள். சிவாச்சிவச்சாரியார் மந்திரங்கள் சொல்ல விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.

    Next Story
    ×