என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா
- உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் மற்றும் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு உலக புவி தினம் குறித்து எடுத்துரைத்தனர்.
அப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றும் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனங்கள், சைக்கிள் பயன்படுத்துவது, மரங்களை நடுவது, மறுசுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும் என்றும், பசுமையான வளமானதாக இந்த பூமியை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.