என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
- கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே இச்சடியில் உள்ள மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரெங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி, அப்பகுதியில் உள்ள கடைகளை உணது பாதுகாப்பு துறை அலுவலர், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும்
சம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது சம்பட்டிவிடுதி எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த அற்புதசாமி (வயது 52) என்பவர் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதசாமிைய கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






