search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடக்கம்
    X

    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடக்கம்

    • திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்குகிறது
    • 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்து–மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு–தோறும் மாசிபெருந்திருவிழா பூச்சொ–ரிதல் மற்றும் தேரோட்டத்து–டன் விமரிசையாக நடைபெறும். மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழாவும் அடுத்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி பூச் சொரிதல் விழாவுடன் கூடிய தேரோட்டம் காப்பு–கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா 26ந்தேதி நடக்கிறது. இதையொட்டி முத்துமாரி–யம்மனுக்கு சிறப்பு அபி–ஷேகம், வழிபாடுகள் நடை–பெறவுள்ளது புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வ–லமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்து–வார்கள். விழாவையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர், பானகம் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகு–தியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவி–லுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதியில் பூக்களை சார்த்தி வழிபட்டுச் செல்வார்கள். தொடர்ந்து 27-ந்தேதி அதிகாலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13.03.2023 அன்று அம்மன் தேரோட்டமும், அதனைத்தொடர்ந்து 05.03.2023 அன்று இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் 15 நாள் திருவிழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்து–மாரியம்மன் வீதிஉலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். 9-ம் நாள் திருவிழாவன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×