search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்முறை போக்கை கிள்ளி எறிய வேண்டும் - முத்தரசன் பேட்டி
    X

    வன்முறை போக்கை கிள்ளி எறிய வேண்டும் - முத்தரசன் பேட்டி

    • வன்முறை போக்கை கிள்ளி எறிய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்த ரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது :-

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தசனாதன தர்மமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதனைக்குறிப்பிட்டு பேசுகிறார்.

    அந்த கருத்து தவறாக இருந்தால் சனாதன தர்மத்தை ஏற்கவில்லை என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சொல்ல வேண்டும். ஏற்பதாக இருந்தால் அது எப்படி நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

    அதை விடுத்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக வன்முறை யை தூண்டுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. அதே போலத்தான் விநாயகர் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையை ஒரிடத்தில் குறிப்பி ட்டுப் பேசினேன். உடனே எனது நாக்கை வெட்ட வேண்டும் என்கிறார்கள்.

    தலையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். புராணக்கதை தவறு என்று சொல்ல மறுக்கிறார்கள். இவர்களின் வன்முறை போக்கை தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×