search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை
    X

    கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை

    • மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
    • கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை நடந்துள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் உண்டியல் உடைப்பு.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அருள்மிகு வெள்ளை முனியன் கோவில் உள்ளது. வாரத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்வார்கள். இக்கோவிலில் பூசாரி யாக இந்திரா நகரை சேர்ந்த சுப்ரமணியன் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, புைஜகள் முடித்துவிட்டு கோவில் பூசாரி சுப்பிரமணியன் கோவில் கதவுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம் போல் காலையில் கோவில் கதவுகளை திறந்த பொழுது, கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சந்திரசேகரன், கந்தர்வகோட்டை காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழங்கு பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர். கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கோவிலின் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது.

    Next Story
    ×