search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு
    X

    ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு

    • ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பட்டது.
    • 10 அடி நீளமுள்ளது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு குட்டியை பாதி விழுங்கி விட்டு அசையமுடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த சிலர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பிடம் இருந்து செத்த நிலையில், ஆட்டுக்குட்டியை இழுத்து வெளிேய கொண்டு வந்தனர். தொடர்ந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

    Next Story
    ×