என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை ஊசி வைத்திருந்தவர் கைது
    X

    போதை ஊசி வைத்திருந்தவர் கைது

    • போதை ஊசி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • போதை ஊசி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்லைன் லாட்டரி விற்பனை, போதை ஊசி விற்பனையை தடுக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மச்சுவாடி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி வைத்திருந்த சின்னதுரையை (வயது 27) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 80க்கும் மேற்பட்ட மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×