search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சண்டையை கிளப்பி அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. திட்டம்- முத்தரசன் குற்றச்சாட்டு
    X

    ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சண்டையை கிளப்பி அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. திட்டம்- முத்தரசன் குற்றச்சாட்டு

    • ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சண்டையை கிளப்பி அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. திட்டம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில யெலாளர் முத்தரசன் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் உட்பட நாடு முழுவதும் எல்லாவற்றிலும் ஒரே முறையே இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

    நாட்டில் ஏழை, பணக்காரர், வீடின்றி நடைபாதையில் குடும்பம் நடத்துவோர், மாட மாளிகையில் வாழ்வோர் என்று பல்வேறு வாழ்க்கை முறை இந்தியாவில் உள்ளது. இதை மாற்றிவிட்டு ஒரே நாடு ஒரே வாழ்க்கை முறைைய கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளதா. மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், 2 முறை மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்கிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சி நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கான ஆட்சியாக இல்லை. குறிப்பிட்ட சில நபர்களுக்கான ஆட்சிதான் நடக்கிறது. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் யாரும் அச்சமின்றி வாழ முடியவில்லை. அ.தி.மு.க.வில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சண்டையை கிளப்பி, கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த பா.ஜ.க. திட்டமிடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×