என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகம்
    X

    சித்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகம்

    • சித்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
    • அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு சிக்தி விநாயகர் கோயில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா பட்டி ஊரணி கரை கோவிலில் நடைபெற்றது. ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு பட்டி ஊரணி கரையில் அமைந்திருக்கும் சிக்தி விநாயகர் கோவில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதில் சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து வேதமந்திரம் முழங்க சக்தி விநாயகருக்கு பால், பழங்கள், பன்னீர்,புஷ்பம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிக்தி விநாயகர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிக்தி விநாயகரை தரிசனம் செய்து சென்றனர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை அன்ன தானம் வழங்கப்பட்டது. வருடாபிஷேக விழா ஏற்பாட்டை, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×