search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 வயது மகளுடன் வாலிபர் குளத்தில் குதித்து தற்கொலை
    X

    5 வயது மகளுடன் வாலிபர் குளத்தில் குதித்து தற்கொலை

    • விராலிமலை அருகே 5 வயது மகளுடன் வாலிபர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
    • மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சோக முடிவு

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது34). இவரது மனைவி பிரியா(30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர்.இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து 3 ஆண்டுகளாக பால்ராஜ் தனது 2 குழந்தைகளுடன், கட்டக்குடியில் வசித்து வந்தார்.

    அவரது மனைவி பிரியா விராலிமலை அருகே உள்ள வில்லாருடையில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த மாதம் தனது மகன் மூலம் செல்போனில் மனைவி பிரியாவை தொடர்பு கொண்ட பால்ராஜ், குழந்தைகள் தாயை பார்க்க விரும்புவதாகவும், அதனால் விராலிமலை மலைக்கோயில் வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி விராலிமலை வந்த பிரியா கோவில் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த பால்ராஜிடம் குழந்தைகள் எங்கே? என்று கேட்டபோது மலை மேல் இருப்பதாக கூறி வற்புறுத்தி மலைமேல் அழைத்துள்ளார்.

    இதை நம்ப மறுத்த அவர் கணவருடன் வாக்குவா தத்தில் ஈடுபடும் போது பால்ராஜ் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தி எடுத்து மனைவியை குத்தினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்ட பிரியா கொடுத்த புகாரின் பேரில் பால்ராஜ் மீது வழக்கு பதிந்த போலீ சார், கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்த னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    வீட்டுக்கு வந்த அவர், தனது ஐந்து வயது மகள் நிக்சனாவுடன் வெளியே செல்வதாக கூறிச் சென்று உள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவி னர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை கட்டக்குடி தர்ம குளம் வழியாக சென்ற வர்கள் குளத்தில் 2 பேரின் பிணங்கள் மிதப்பதை கண்டு இலுப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு, விசாரணை நடத்திய போது அது பால்ராஜ் மற்றும் அவரது மகள் நிக்சனா என்பது தெரிய வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் பால்ராஜ், மகள் நிக்சனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.உடல்களை புது க்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×