என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்தனர்.
- செல்போன், வாகனம் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை பகுதிகளில் கஞ்சா விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு ரகசிய தகவல் வந்துள்ளதை அடுத்து, அப்பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னப்பா நகரைச்சேர்ந்த முகமது அபிபுல்லா (வயது 19) தோப்புக்கொள்ளை காளியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா, செல்போன், அவர் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வல் லத்திராக்கோட்டை காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Next Story






