என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மினி பஸ் மோதி மாணவன் பலி
    X

    மினி பஸ் மோதி மாணவன் பலி

    • மினி பஸ் மோதி மாணவன் பலியானார்
    • ஆவணம் கை காட்டி சென்ற போது சம்பவம்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி ஊராட்சி நல்லாண்டார் கொல்லை கிராமத்தில் வசிப்பவர் அழகர் மகன் ராமகிருஷ்ணன் (வயது 16) இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் ஆவணம் கை காட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இந்நிலையில் எதிரே வந்த தனியார் மினி பஸ் இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×