என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவியை கடத்தி 3 பேர் பாலியல் பலாத்காரம்
- கறம்பக்காடு ஜீவா நகரைச்சேர்ந்த (17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகியோர் சிறுமியை வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை கறம்பக்காடு ஜீவா நகரைச்சேர்ந்த (17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று சமையல் அறையில் படுத்திருந்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகியோர் வாயை பொத்தி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி தனது தாயிடம் சிறுமி அழுதுகொண்டே கூறினார்.
இதையடுத்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி வழக்குப்பதிவு செய்து சின்ராஜ், பிரசாத் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தார்.
இதற்கிடையே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இதேபோல் போலீசார் தேடி வரும் ராஜா மது போதையில் மயக்க நிலையில் அறந்தாங்கி மருத்துவமனையில் உள்ளதாகவும் அவர் உடல்நிலை சரியான பிறகு போலீசார் அவரை கைது செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்ராஜ், பிரசாத் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.






