என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு
    X

    ஆலங்குடியில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு

    • ஆலங்குடியில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது
    • கற்பக விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்புல்லான் விடுதியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கற்பக விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகருக்கு பிடித்தமான அவல்பொரி, கடலை, எள்ளுருண்டை அப்பம், கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல் போன்ற பதார்த்தங்களை படையல் செய்து விநாயகருக்கு வழிபாடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாவிளக்கில் தீயை வைத்து அதில் தீயை பற்ற வைத்து மா விளக்குடன் தீயை விழுங்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீயை விழுங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.


    Next Story
    ×