என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள கேப்பறை சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான சித்த விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் வழிபாடு நடைபெற்றது. அதேபோல் திருவரங்குளம் கடைவீதியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தெப்பக்குளக்கரையில் அமைந்துள்ள சித்தி விநாயக ர் பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேட்டுப்பட்டி சரளைப்பள்ளம் தரிசன விநாயகர், திருக்கட்டளை விநாயகர் கோவில், கைக்குறிச்சி விநாயகர், கோவில் பூவரசகுடி விநாயகர் கோவில், வல்லத்திராக்கோட்டை விநாயகர் கோவில், கீழையூர் நாயகர் கோவில், பாளையூர் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வே று இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது