என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    சிறப்பு கிராம சபை கூட்டம்

    • சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • அடையாள அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திரா நகரை சேர்ந்த மூத்த குடிமக்கள் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் அப்துல் காதர் ஜெய்லானி கலந்து கொண்டார். தணிக்கை அலுவலர் அந்தோணியம்மாள் அறிக்கையை வாசித்தார். புதிதாக மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அடையாள அட்டை கேட்பவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×