search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் சிறப்பு தூய்மை முகாம்   கலெக்டர்  மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
    X

    புதுக்கோட்டையில் சிறப்பு தூய்மை முகாம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    • புதுக்கோட்டையில் சிறப்பு தூய்மை முகாம்
    • கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாபெரும் சிறப்பு தூய்மை முகாம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குப்பை அதிகமாக சேரும் பகுதிகள் கண்டறியப்பட்டு, பொதுமக்களின் பங்களிப்போடு தூய்மை பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்திட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, சாலையோ ரங்கள், தெருக்கள், நீர்நி லைப் பகுதிகள், பொது நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், சுகாதார மையங்கள் அங்கன்வாடிப் பகுதிகள், பேருந்து நிறுத்த ங்கள், சந்தைகள் மற்றும் குப்பைகள் சேரும் பகுதிகள் கண்டறியப்பட்டு இப்ப ணிகள் மேற்கொள்ள ப்பட்டது.

    எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து த்தர ப்பினரும், தங்களின் சுற்று ப்புறப் பகுதிகளை தூய்மை செய்து, சுற்றுசுழலை தூய்மையாக பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து 'தூய்மையே சேவை" எனும் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அரசு அலுவல ர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவி தப்பிரியா, புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் அழ.ராமு, வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் நளினி, சங்கர் தாசில்தார் புவியரசன்,

    ஊராட்சிமன்றத் தலைவர் சிக்கந்தர் உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதி நிதி கள், தூய்மைப் பணி யாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.

    திருமயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் தூய்மையே சேவை என்ற சிறப்பு தூய்மை முகாமை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்ட காட்சி.

    Next Story
    ×