என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவரை அரிவாளால் வெட்டிய மகன் கைது
- முதியவரை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார்.
- சொத்து தகராறில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை
வடகாடு அருகே அனவயல் எல்.என்.புரம் ஊராட்சி செங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பால்சாமி (வயது 65). இவரது தம்பி கந்தையா மகன் சங்கர் (47). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது சங்கர், பால்சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் குடிபோதையில் பால்சாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சங்கர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்சாமி தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பால்சாமியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பால்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து அறந்தாங்கி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.






