search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா
    X

    கந்தர்வகோட்டையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
    • விழாவில் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு ஆத்தியடிப்பட்டி, கீழவாண்டான் விடுதி, ஆத்தங்கரை விடுதி, பல்லவராயன் பத்தை, முள்ளம்குறிச்சி, துவார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி சித்திரைவேல் ஆத்தங்கரை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×