என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாங்கி தருவதாக கூறிலட்சக்கணக்கில் பண மோசடி
    X

    வேலை வாங்கி தருவதாக கூறிலட்சக்கணக்கில் பண மோசடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அடுத்தடுத்த புகாரால் பரபரப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழு–வில் புதுக்கோட்டை மச்சு–வாடி பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்பவர் சேர்ந்துள்ளார். இவர் போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அனைத்து விஷயங்களிலும் முக்கிய நபராக இருந்து தன்னை முன்னிலைப்படுத்தி காண் பித்துள்ளார்.இந்நிலையில் அவர் அணிந்து வரும் ஆடையில் கூட போலீஸ் என அச்சி–டப்பட்டு இருக்கும். இத–னால் இவன் காந்திநகர் 5-ம் வீதியில் வசிக்கும் திருமூர்த்தி என்பவரிடம் தான் உங்கள் மகனுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறேன் என்றும், வேலைக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ.7 லட்சம் வேண்டும் என கேட்டு கடந்த 28.9.22 அன்று வாங்கியுள்ளார்.மேலும் தற்போது கணேஷ்நகர் காவல் நிலை–யத்தில் போலீஸ் இன் பார்மாராக உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே கார்த்திக் மீது திருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவ–ரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்றபோது கார்த்திக் வீடு பூட்டி கிடந்துள்ளது. இதனால் திருமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந் திதா பாண்டேவிடம் புகார் மனு அளித்தார.இதற்கிடையே நேற்று புதுக்கோட்டை டிரைவர் காலனியை சேர்ந்த சிவ–யோகம் என்பவர் முருகன் மகன் கார்த்திக் மற்றும் முருகன் மனைவி கார்த்திக், தாய் கமலி ஆகியோர் மீது ஒரு புகார் மனுவை காவல் சூப்பிரண்டிடம் கொடுத் துள்ளார். அதில் கார்த்திக் தனக்கு போலீஸ் வேலை கிடைக்க இருப்பதால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரூ.1.20 லட்சத்தை வாங்கியுள்ளார்.அவரது அம்மா கமலி அப்பகுதியில் நடத்தி வந்த குழுவில் ரூ.5 லட்சம் வாங்கி விட்டு அதை திருப்பி கொடுக்கவில்லை என புகார் செய்திருந்தனர். சிவயோகத்துடன் குழுவில் இருக்கும் ராஜலெட்சுமி, ஆமினா, அஸ்மா, ஜோஸ்மின் ராணி, சாந்தி, மாதவி ஆகி–யோரும் போலீஸ் சூப்பி–ரண்டிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்ப–தாக மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு தெரிவித்துள்ளார். இந்த மோசடி சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

    Next Story
    ×