என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை
- அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது
- வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் (வயது39), மாதவி தம்பதியர்கள், மனைவி மாதவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். ரமேஷ் பேருந்து நிலையம் பின்புறம் மொபைல் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாப்பாட்டிற்காக வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






