என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதி பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க கோரிக்கை
- பொன்னமராவதி பகுதிகளில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜனநாயக மாதர் சங்கத்தில் தீர்மானம்
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆறாவது ஒன்றிய மாநாடு எஸ்.லதா தலைமையில் நடைபெற்றது.
100 நாள் வேலை நேரத்தை காலை 7 மணி என்பதை 9 மணிக்கு மாற்ற வேண்டும்.பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களை மாநில அரசு ஆய்வு செய்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
பொன்னமராவதி பகுதிகளில் நடைபெறுகிற பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், குழந்தை திருமணங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவராக ஏ.ரோகிணியும் ஒன்றிய செயலாளராக ஆர். மதியரசியும், ஒன்றிய பொருளாளராக கே. கலைச்செல்வியும், துணைத் தலைவர்களாக எஸ்.லதா, அழகு மீனா, ஒன்றிய துணைச் செயலாளர்களாக ரேவதி, சி.தேன்மொழி மற்றும் எட்டு பேர் கொண்ட ஒன்றிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.சலோமி சிறப்புரையாற்றினார்.
சி.பி.எம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், வாலிபர் சங்க நிர்வாகி கே.குமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி,ஒன்றிய தலைவர் ஏ.செளந்தரராஜன், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் விஆர்எம்.சாத்தையா, எஸ்.நல்லதம்பி, சிஐடியு எஸ்.மணிமாறன்,ஏ.தீன், எம்.மாயழகு, அனைத்து துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்டார தலைவர் வி.சுப்பிரமணியன், ராமன், பாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.






