என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.8 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் குளம் சீரமைப்பு
- ரூ.8 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
- சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் ஊராட்சியில் அண்ணா நகர் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தின் கரைகளை பலப்படுத்தவும், புதிய படித்துறை கட்டித் தரவும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் |மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story