search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    • கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும்

    புதுக்கோட்டை:

    திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழாத்தூரில் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திரா தலைமையில் கிராம சபைக்கூட்டம் தொடங்கியது. இதில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அலுவலர் ஒருவரும், கிராமத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது அனைத்துத்துறை அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்த பிறகு கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் வரவு செலவு கணக்கில் முரண்பாடு இருப்பதாக கூறி மீண்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் உடனே கொண்டு வரப்படாததால் மாலை வரை கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கிடைய கிராம சபைக்கூட்டம் நடத்தியதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவு அலுவலர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.

    இதை தொடர்ந்து கீழாத்தூரில் உரிய வரவு, செலவு ஆவணங்களுடன் கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×