என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் புரவி எடுப்பு விழா
    X

    பொன்னமராவதியில் புரவி எடுப்பு விழா

    • ஆதினமிளகி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் வழிபாடு

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோவிலில் புரவி எனப்படும் மண் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக கடந்த சித்திரை மாதம் பிடிமண் கொடுக்கப்பட்டு ஆவாம்பட்டியில் மண்ணினால் புரவிகள், காளை மற்றும் மதலை சிலைகள் வடிவமைக்கப்பட்டது. சிலைகள் வடிவமைக்கப்பட்ட பின்னர், அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்தபடி, மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, முள்ளிப்பட்டி, மேலத்தானியம், சூரப்பட்டி, வெள்ளைய க்கவுண்டம்பட்டி, டி.அம்மாபட்டி, வடக்கிபட்டி உள்ளிட்ட எட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும்போது, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புரவி எடுப்பு திருவிழா பல தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெறுவதன் மூலமாக நல்ல மழை,விவசாயம் ,தொழில் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் , ஊர் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை என்று அவர்கள் கூறினர்.

    Next Story
    ×