என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
    X

    பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

    • பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தீராத வயிற்று வலியால் அவதியடைந்த

    புதுக்கோட்டை

    வடகாடு அருகேயுள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த நாடிமுத்து மகள் திலகா (வயது 16). இவர் கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திலகா கடந்த 1-ந்தேதி விஷம் குடித்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திலகா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×