search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை சுத்தம் செய்ய சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
    X

    வீட்டை சுத்தம் செய்ய சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

    • வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
    • வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது50) இவரது மனைவி விஜயலெட்சுமி இருவரும் தங்களது மகளுடன் அறந்தாங்கியில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.

    வெளிநாட்டிலிருந்து வந்த அவர் தனது சொந்த ஊரில் உள்ள பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக மாங்குடிக்கு சென்றுள்ளார். அங்கே வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதும் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்த்துறையினர், உள்ளே சென்று பார்க்கையில் வைத்தியலிங்கம் காலில் மின் ஒயர் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்டது.

    பழைய வீட்டை புதுப்பிக்க சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்து 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×