என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- 328 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) ஆர்.கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






