என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிப்பர் லாரி மோதி முதியவர் பலி
    X

    டிப்பர் லாரி மோதி முதியவர் பலி

    • டிப்பர் லாரி மோதி முதியவர் பலியானார்
    • அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி நாடியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (வயது 70), இவர் நகரில் பிரதான சாலையிருந்து கல்லுகுண் டு கரை சென்றபோது எதிர் பரவிதமாக டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அப்துல் ஜபார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,

    Next Story
    ×