என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்
    X

    கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்

    • கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 23. 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை, தி.மு.க. மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தமிழ் ஐயா பரமசிவம், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, இளைஞரின் அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், ஆரஞ்சு பாப்பா குணசேகரன், செல்லப்பிள்ளை, அருணாச்சலம், கல்லாக்கோட்டை முத்துக்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×