search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவில் திறப்பு
    X

    விராலிமலை அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவில் திறப்பு

    • விராலிமலை அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவில் திறக்கப்பட்டது
    • இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி ஊராட்சி தென்னிலை பட்டியில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு நடத்தி வந்த 3 தரப்பினர்களுக்கு இடையே முதல் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் கோயில் பூட்டப்பட்டது. இதனால் திருவிழா நடத்த முடியாமலும், தினசரி வழிபாடு நடத்த முடியாமலும் பக்தர்கள் மனவேதனை அடைந்து வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதுகோட்டை மாவட்ட தேவஸ்தான அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட 3 தரப்பினரையும் அழைத்து கோயில் திறக்கப்படுவதாக தெரிவித்ததோடு மேற்படி முதல் மரியாதை தொடர்பாக ஏதேனும் நிவர்த்தி வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடிக்கொள்ளமாறு அறிவுறுத்தினர்.

    அதைதொடர்ந்து திருக்கோயில் தஞ்சாவூர் இணை ஆணையர் ஞானசேகரன், புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா, திருக்கோவில் தக்கார் சந்திரசேகர், குளத்தூர் சரக ஆய்வாளர் யசோதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர், திருக்கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டு நித்திய பூஜை நடைபெற்றது. 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×