என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரி அதிகமாக இருப்பது குறித்து நகராட்சி பரிசீலனை
- சி.பி.எம். போராட்டம் எதிரொலி
- புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உறுதி
புதுக்கோ ட்டை.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வீடு, வணிக நிறுவனங்கள், அ லுவலகங்கள் உள்ளிட்ட சொத்துவரிகளை நகராட்சி நிர்வாகம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. உயர்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், உடனடியாக வரி உயர்வைத் திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் நகரக்குழு உறுப்பினர்கள் அடைக்கலசாமி, ஜெயபாலன், ரகுமான், பாண்டியன், கணேஷ், நிரஞ்சானதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மகாதீர் மற்றும் வசந்தகுமார், காலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் சேகரன், கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் அப்துல் ஆகியோர் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவரத்தையில் உயர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பை பரிசீலனை செய்வதாகவும், அதிகமாக வரி விதிக்கப்பட்ட பயனாளிகள் புகார் மனு அளித்தால் பரிசீலனை செய்வதாகவும் அதிகாரிகள் உறுயளித்தனர். வரிவிதி ப்புக்கு எதிரான பொது மக்களின் கோரிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது






