என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கூட்டம்
- ஒய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கூட்டம்
- ஒய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய்த்துறை ஒய்வுபெற்ற கிராம உதவியாளர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ.ராஜூ தலைமைவகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.பி.ரெங்கசாமி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.முருகையன், மாநில பிரச்சார செயலாளர் வ.புலிகேசி, மாநில செயலாளர் டி.பரமசிவம், மாநில அமைப்பாளர் எஸ்.ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர்.
2023ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் மாநில சங்கம் மூலம் இதர கோரிக்கைகளை பெற முதல் மாநில மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலர் எம்.பாண்டியன், ஒய்வு பெற்ற கிராம உதவியாளர் சங்க மாவட்டத்தலைவர் செ.ராமன், பிஎல்.நைனான், மாநில பொதுச்செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் சங்க பொன்னமராவதி வட்டத்தலைவர் எம்.பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் ஏ.எல்.பிச்சை வரவேற்றார். மாநில பொருளாளர் பி.ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.






