என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
    X

    மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை இராணியார்மகளிர்அரசு மேல்நிலைப்பள்ளியில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 250 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதில், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தொடங்கி வைத்து 22 பயனாளிகளுக்கு ரூ.1,08,500 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர்மாவட்ட கலெக்டர்தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி ஆகிய 3 வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதே போல 16.09.2023 அன்று திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 23.09.2023 அன்று ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்தார். இம்முகாமில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர்திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், நகர்மன்ற துணைத்த லைவர்லியாகத்அலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, வட்டாட்சியர்விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்.

    Next Story
    ×