என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி சீட்டு விற்றவர் கைது
    X

    லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பதாக ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி கலைஞர் நகரை சேர்ந்த தேசிகன் (வயது 60) வீட்டில் வைத்து வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்ததை பார்த்த தனிப் படை போலீசார், அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 16 மற்றும் ரூபாய் 1500 பறிமுதல் செய்து , அவரைஆலங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆலங்குடி போலீசார் அவர் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×