என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
- லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- மூன்று குழந்தைகள் உள்ளது
புதுக்கோட்டை:
ஆலங்குடி கம்பர் தெருவை சேர்ந்த ராஜு மகன் கதிரேசன் (வயது 42) லாரி டிரைவராக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராஜாத்தி என்ற மனைவியும், தரணி (18) தரணிஈஸ்வரன் (16 )பாலமுருகன் (13 )ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்த கதிரேசன், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






