என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மொய் விருந்து பத்திரிகை எண்ணிக்கை பார்த்து புலம்பிய நபரின் ஆடியோ வைரல்
- மொய் விருந்து பத்திரிகை எண்ணிக்கை பார்த்து புலம்பிய நபரின் ஆடியோ வைரல்- பரபரப்பு
- 80 மொய் பத்திரிக்கை வந்திருப்பதாக கூறினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவ ட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், நெடுவாசல், கறம்பக்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி ற்றம்பலம், பேராவூரணி, களத்தூர், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, ஆவணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டு தோறும் ஆடி மற்றும் ஆவணி மாத த்தில் மொய் விருந்து விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த மொய் விருந்தில் டன் கணக்கிலான ஆட்டு க்கறி விருந்து நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் மொய் பணம் வசூலிக்கப்படும்.
இந்த மொய் பணத்திற்கு வரி பிடித்தம் இல்லை. மேலும் மொய் விருந்து நடத்தி வசூல் செய்த பண த்தை 5 ஆண்டுகள் வரை சிறுக சிறுக திருப்பி செலுத்த லாம் என்பது நடைமுறையில் உள்ளது.
இதனால் அதிக அளவில் இப்பகுதி மக்கள் மொய் விருந்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொய் பண த்தை வைத்து விவசா யம், வியாபாரம் தொழில் போன்றவற்றை செய்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றனர்.
ஆனால் காலப்போக்கில் இந்த மொய் விருந்து எந்த அளவிற்கு மொய்த்தொகை அதிகமாக கிடைக்கிறதோ அதை வைத்து மொய் விருந்தாளர்களின் கௌர வம் எடை போட்டு பார்க்க ப்பட்டதால் சிறிய அளவில் நடந்து வந்த மொய் விரு ந்தில் பெரிய அளவிலான தொகை புரளத் தொடங்கி யது.
ஆயிரக்கணக்கு லட்ச க்கணக்காக மாறி கோடிக்க ணக்காக வளர்ந்தது. இத னால் சரியான நேரத்திற்கு மீண்டும் மொய் பணத்தை செலுத்த முடியாமல் ஏரா ளமானோர் தங்களது நிலங்களையும் வீட்டில் உள்ள நகை பொருட்க ளையும் விற்கும் அவலம் ஏற்பட்டது.
அதன் காரணமாக மொய் விருந்து ஆர்வம் குறைந்து தற்போது பெரு ம்பாலான பகுதிகளில் மொய் கணக்கு முடிக்க ப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் மொய் விருந்து எண்ணிக்கை சற்று குறை வாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக மொய் விருந்து நடத்தப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது.
கொரோனா காலத்தில் இன்று மாலை எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள பதற்றத்தோடு காத்திருந்தது போல இன்று மாலைக்குள் எத்தனை மொய் பத்திரிக்கை வந்து சேரும் என்று பதட்டம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மொய் விருந்து பத்திரிக்கை எண்ணிக்கையை பார்த்து மனம் வெறுத்த நபர் ஒருவர் தனது உறவினருக்கு வாட்ஸ் அப் மூலம் தனக்கு 80 மொய் பத்திரிக்கை வந்திருப்ப தாகவும் இதோடு உலகம் அழிந்துவிட போவது போல் மொய் விருந்து நடத்தப்ப டுவதாகவும் புலம்பியு ள்ளார்.
இந்த ஆடியோ தற்போது வெளியாகி இப்பகுதி மக்க ளிடம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்